நீண்ட காலம் சிறையில் வாடும் இஸ்லாமியர்களின் விடுதலைக்கு தமிழ்நாடு முதல்வர் மனிதாபிமானத்தோடு நடவடிக்கை எடுப்பார் என சிறுபான்மையினர் பிரிவு ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை வெளிப்படுத்த அண்ணாமலையிடம் கூறும் சீமான், பாஜக உறுப்பினர்களின் ஊழல்களையும் வெளிப்படுத்த கூற வேண்டும் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், பாலியல் குற்றம், ஆள்மாறாட்டம் போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவருக்கும் புகலிடமாக பாஜக உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக பாஜகவில் சேருவோரிடம் இருந்து பெருமளவில் பணம் பெற்று கொண்ட பின்னே கட்சியில் சேர்ப்பதாக அண்ணாமலை மீது அவர் குற்றம்சாட்டினார்.
—-ம.ஶ்ரீ மரகதம்