நீட் தொடர்பான சர்ச்சை வீடியோவை தான் பதிவிடவில்லை என்று அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் க. பாண்டியராஜனின் ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை நீட் தொடர்பான வீடியோ ஒன்று பகிரப்பட்டது. பகிரப்பட்ட சிறிது நேரத்தில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்நிலையில் அந்த வீடியோவை தான் பகிரவில்லை என்றும் தனது ட்விட்டர் கணக்கை வேறு யாரோ தவறாக பயன்படுத்திவிட்டார்கள் என்று அமைச்சர் க. பாண்டிராஜன் தெரிவித்துள்ளார்.
சமந்தபட்டவர்கள் மீது கூடியவிரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட வீடியோவில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.







