தமிழ்நாட்டில் இம்மாத இறுதிக்குள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள டெங்கு சிறப்பு வார்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், விடுமுறை இல்லாமல் பணியாற்றும் செவிலியர்கள், மன உளைச்சலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஞாயிறு தடுப்பூசி முகாம் நடைபெறுவதால், திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் 64 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 22 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசிகளும் செலுத்திக்கொண்டுள்ளதாகவும் கூறினார். பின்னர் இம்மாத இறுதிக்குள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் 10ம் தேதி 5ம் கட்டமாக நடைபெறும் சிறப்பு முகாமுக்கு, 30 ஆயிரம் தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.