பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை; அன்பில் மகேஸ்

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சென்னை, அரசு மதரஸா-ஐ-அசாம் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு…

பள்ளி வகுப்பறைகளில் குழந்தைகளுக்கான பாலியல் புகார்களுக்கான இலவச அழைப்பு எண் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, அரசு மதரஸா-ஐ-அசாம் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர் . பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் பாடம் கற்பிக்கும் நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஸ் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் கல்வியாண்டில் அனைத்து பாடப்புத்தகங்களிலும் பாலியல் புகார் குறித்து தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண்கள் இடம்பெறும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு பொது தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை. மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக பாடத்திட்டம் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை போக்சோ சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் இது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என எண்ணாமல் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களும் மாணவர்களுக்கும் நம்பிக்கையையும் ஏற்படுத்த கூடிய வகையில் செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.