கர்நாடகாவின் மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகள் மேகதாது அணை விவகாரத்தை கையில் எடுத்திருப்பதாகவும் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அணைக்கான அனுமதி பணிகளின் நிலையை அடிப்படையாக கொண்டு அத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற கர்நாடக முதலமைச்சரின் கருத்தை தமிழ்நாடு அரசு அலட்சியமாக கருதக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்படி மேகதாது அணைக்கு அனுமதி வழங்க முடியாது என்றாலும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக எத்தகைய நாடகமும் அரங்கேற்றப்பட வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ள அன்புமணி , மேகதாது அணை வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது எனவும் கர்நாடக அரசின் அனைத்து முயற்சிகளையும் அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் முறியடிக்க தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பாமக ஆதரவு அளிக்கும் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.