சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த மாணவி திவ்யா தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்த மாணவி திவ்யா கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி திவ்யா, அவரது அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து திவ்யாவின் உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே பணிச்சுமை காரணமாகவே தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டி உள்ளார்.







