சமூகத்தில் நல்லிணக்கம், இரக்கம் ஆகியவற்றிற்கான முதன்மையான பண்பு இன்னும் மேலோங்கட்டும் என பிரதமர் நரேந்திரமோடி ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். பல்வேறு நாடுகளில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தியாவிலும் இன்று ரம்ஜான் பண்டிகை உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வழிபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி இன்று தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ரம்ஜான் பண்டிகை தினத்தில் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
நம்முடைய சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் இரக்கம் ஆகியவற்றிற்கான முதன்மையான பண்பு இன்னும் மேலோங்கட்டும். ஒவ்வொருவரும் மனநிறைவான வகையில் உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெறுவதற்காகவும் நான் வேண்டி கொள்கிறேன் என அவர் தெரிவித்து உள்ளார்.