முக்கியச் செய்திகள் தமிழகம்

அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்- ஆளுநர் தமிழிசை பொங்கல் வாழ்த்து

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.

2023ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மையையும், பாரம்பரிய உணவுதானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் பிக்கிலி!…

Web Editor

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விலக வேண்டும்- திமுக

G SaravanaKumar

மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

G SaravanaKumar