2020-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது. ராஜஸ்தான் ராயல்ஸ் 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எஞ்சிய 2 இடங்களுக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன.









