முக்கியச் செய்திகள்செய்திகள்விளையாட்டு

மாஸ்டர்ஸ் செஸ்: உலக சாம்பியனை வீழ்த்தி தமிழ்நாடு வீரர் சாதனை!

கத்தாரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் கார்த்திகேயன் முரளி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.

கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரின் 7வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை எதிர்கொண்ட இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதன்மூலம் கார்த்திகேயன் முரளி, கார்ல்செனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். இன்னும் 2 சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், தற்போது 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்செனை வீழ்த்திய 5-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கார்த்திகேயன் முரளி. இதற்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிருஷ்ணா, பிரக்ஞானந்தா, விதித் ஆகியோர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கார்ல்செனை வீழ்த்தியுள்ளனர்.

இதில் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மற்றும் கார்த்திகேயன் முரளி ஆகிய மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் – மத்திய அமைச்சர்!

Web Editor

அதிமுக உட்கட்சி தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

EZHILARASAN D

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading