திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக விஷால் புகாரளித்தது தொடர்பாக அவரது உதவியாளர் மற்றும் அதிகாரிகள் இருவரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
விஷால் நடிப்பில் செப்.15-ம் தேதி வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பினை பலரும் பாராட்டினர். ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இப்படம் இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, மகாராஷ்டிராவில் இப்படத்தின் டப்பிங் மற்றும் திரையிடலுக்காக அதிகாரிகள் தன்னிடம் ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், படம் வெளியாக வேண்டும் என்பதால் இரண்டு பரிவர்த்தனைகளாகக் கேட்ட தொகையைக் கொடுத்ததாகவும் விஷால் புகார் தெரிவித்திருந்தார்.
நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டு சினிமா துறையினரிடம் மட்டுமன்றி, பொதுமக்கள் பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திரைப்பட தணிக்கை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக நடிகர் விஷால் கூறிய புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி லஞ்சம் பெற்ற திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதையும் படியுங்கள் : பேப்பர் கப், பிளாஸ்டிக் பைகள் மீதான தடை செல்லும் – தமிழ்நாடு அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்..!
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மும்பையில் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணன், அவர் மூலமாக லஞ்சம் பெற்ற தரகர்கள் மேனகா ஜுஜூ ராமதாஸ், ராஜன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக மும்பை சிபிஐ அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து வருகிறது.