காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜூன கார்கே, வருகிற 26-ம் தேதி பதவி ஏற்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூருக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. இதில் நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் மல்லிகார்ஜூன கார்கே 7 ஆயிரத்து 897 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் ஆயிரத்து 72 ஓட்டுகள் மட்டுமே பெற்றிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மொத்தம் பதிவான வாக்குகளில் 400 ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் மூலம் கடந்த 24 ஆண்டுகளில் நேரு-காந்தி குடும்பத்தை சாராத முதல் தலைவர் என்ற புதிய சரித்திரத்தை மல்லிகார்ஜூன கார்கே படைத்துள்ளார். இந்நிலையில் வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) அவர் தலைவராக பதவி ஏற்க உள்ளார்.
முன்னதாக நேற்று டெல்லியில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே வீட்டுக்கு சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட், சசிதரூர் ஆகியோர் நேரில் சென்று கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.