‘மக்கள் மேடை’ – புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்!

லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம் என்றும் லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஒன்றாக சேர்ந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களை செய்வோம் என்று கூறியுள்ள லதா ரஜினிகாந்த், இயக்கத்தில் சேருவதற்காக தனி மொபைல் எண்ணும் அறிவித்துள்ளார்.

இந்த இயக்கத்தில் இணைய விரும்புவோர் 7550080515 என்ற அலைபேசி எண் அல்லது makkalmedaitain12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற எங்கள் இயக்கத்தில் சேரலாம். பெரும் மக்கள் சேவையாக மக்கள் சக்தியாக உருவாகி இந்த சமூகத்திற்கு பல நன்மைகளை செய்ய முன்வாருங்கள். ஒன்றாக சேருவோம். ஆக்கப்பூர்வமான காரியங்களை செய்வோம். மூத்த குடிமக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் என யாராக இருந்தாலும் உங்களின் அனுபவத்தை எங்களுக்கு கொடுக்கலாம். எங்களோடு தொடர்பு கொண்டு இந்த தமிழ்நாட்டிற்காகவும் தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். உள்ளூர் தலைவர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.