37.7 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மகளிர் உரிமை தொகைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படியுங்கள் : மேலூர் அருகே கோயில் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு: 8 மாடுபிடி வீரர்கள் காயம்!

இதனைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செப்டம்பர் 15-ம் தேதி, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை கொடுக்கும் திட்டத்திற்கு எதிராக கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழ்நாடு அரசு கடனில் உள்ளது. இந்த சூழலில் இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். அதனால் இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

அதனை தொடர்ந்து, அந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading