மதுரை கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக்கூடு விழாவிற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள புகழ்பெற்ற தர்ஹா குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியாக்களின் சந்தனக்கூடு உரூஸ் மத நல்லிணக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 6 மணியளவில் உரூஸ் பிறைக்கொடி பாரம்பரிய ஹக்த்தார்கள் முன்னிலையில் யாசின் ஓதிதுஆவுடன் ஏற்றப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் திரளான பொதுமக்கள் ஜாதி மத பேதமின்றி பங்கேற்று அவுலியாக்களின் நல்லாசி பெற்றனர். மாலை நடைபெறும் உரூஸ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியம், ஒட்டகம், நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை நாளை அதிகாலை வந்தடைந்தடையும்.அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் இந்த விழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் அனைத்து மதத்தினரும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி தர்ஹா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இறையன்பன் குத்தூஸ், முகவை சீனி முகம்மது, ஜெயபாரதி ஆகியோர்களின் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சுதீன் அபு, மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.