நாடு முழுவதும் கடந்த 209 நாட்களுக்கு பின்னர் கொரோனா தொற்று பாதிப்பு 18,346 ஆக குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18,346 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இது கடந்த 209 நாட்களில் பதிவான எண்ணிக்கையை விட குறைவாகும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மொத்த பாதிப்பில் ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை 1 சதவிகிதத்திற்கும் கீழாக பதிவாகியுள்ளது. தற்போது ஆக்டிவ் கேஸ் எண்ணிக்கை 0.75%ஆக உள்ளது. 2,52,902 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இதன் காரணமாக குணமடைவோர் விகிதம் 97.93% ஆக பதிவாகியுள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 3,31,50,886 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பை பொறுத்த அளவில், 263 பேர் கடந்த 24 மணி நேரத்திலும், இதுவரை 4,49,260 பேரும் உயிரிழந்ததுள்ளனர்.
இதுவரை 91,54,65,826 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 72,51,419 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 11,41,642 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 57,53,94,042 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.