முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆவின் உட்பட பல்வேறு அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவர் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, ராஜேந்திர பாலாஜி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையே தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.