எதிர்க்கட்சிகளின் அமளியால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19- ஆம் தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மூன்று நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 4-வது நாளான இன்றும் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது. மக்களவையில் செல்போன் ஒட்டுக்கேட்பு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேபோல், எதிர்க்கட்சிகளில் அமளியால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவையும், ஒத்திவைக்கப்பட்டது.