எதிர்க்கட்சிகள் அமளி: 4-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

எதிர்க்கட்சிகளின் அமளியால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19- ஆம் தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில்…

எதிர்க்கட்சிகளின் அமளியால், நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19- ஆம் தேதி தொடங்கியது. செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மூன்று நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியது.

இந்நிலையில், 4-வது நாளான இன்றும் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது. மக்களவையில் செல்போன் ஒட்டுக்கேட்பு பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதேபோல், எதிர்க்கட்சிகளில் அமளியால் பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவையும், ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.