ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலையில், அந்த 7 பேருக்கும் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது தமிழக அரசால் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள் தமிழக ஆளுநருக்கு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால் பின் அந்த கோப்பு குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அதனை குடியரசு தலைவர் நிராகரித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மீண்டும் கொடுத்த மனுவை ஆளுநர் காலதாமதப்படுத்தினார் என உச்சநீதிமன்றம் ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்தனர். இதனை மேற்கோள் காட்டி மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்ய வேண்டும் என கோரியதால் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விடுதலையானது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எங்களுக்கு அதிர்ச்சியையும், மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். ஆளுநர் உரிய நேரத்தில் முடிவெடுக்காததால் விடுதலை செய்ய ஏதுவாக இருந்துள்ளது.
பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி, தற்போது விடுதலை செய்வது ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. நீதிமன்றம் தீர்ப்பை, நீதிமன்றமே மாற்றுகிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.
தீவிரவாதிகள் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். பின்னர் நாம் வெளியே வரலாம் என்ற மனபோக்கை இந்த தீர்ப்பு ஏற்படுத்துகிறது. இதனை ஒரு சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றது. மத்திய அரசு 7 பேர் விடுதலை குறித்து உடனடியாக மறு சீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து அவர்களின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் மறு சீர்ராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அரிசி வாங்கியதில் ஊழல் நடைபெற்றது என கூறும் பா.ஜ.க அரசு அதனை நிருபிக்க முடியுமா? என கேள்வியெழுப்பினார்.
மாதம் தோறும் 20 கிலோ அரசி சிகப்பு அட்டைக்கும், 10 கிலோ அரசி மஞ்சள் நிற குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்பட்டது. அரிசிக்கு பதிலாக பணமாக தான் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு ஆணையிட்டது. மாநில அரசின் பணத்தில் தான் அரிசி போடப்பட்டது. மத்திய அரசு தடையாக இருக்க கூடாது என்று நீதிமன்றம் சென்றோம். ஊழல் என்று சொன்னால் ஏன் விசாரணை வைத்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரமற்ற குற்ற சாட்டுகளை காங்கிரஸ் மீது கூறுவதே புதுச்சேரி பா.ஜ.க. தலைவரின் வேலையயாக உள்ளது என்று கூறினார்.