சுதந்திர நாளில் மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதத்தைப் போக்கி, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்போம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.







