பகத் சிங்கின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம் – பிரதமர் மோடி பதிவு!

சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு நாளையொட்டி உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. மார்ச் 23ம் தேதி 1931 அன்று பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதால், இந்த நாள் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினத்தை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

“பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் உன்னத தியாகத்தை நினைவு கூர்வோம். சுதந்திரம் மற்றும் நீதிக்கான அவர்களின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது”. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

அதேபோல் டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“தொலைநோக்குப் பார்வை கொண்ட தீவிர சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்ந்த டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவர் தனது வாழ்க்கையை பின் தங்கியவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கும் அர்ப்பணித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.