விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு, நாட்டிற்கே முன்மாதிரி வழக்காக இருக்கும் வகையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு விளக்கமளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் எனவும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதை ஆணித்தரமாக கூறுவதாகவும் குறிப்பிட்ட அவர், பொள்ளாச்சி பாலியல் வழக்கைபோல் இல்லாமல், இந்த வழக்கு வேகப்படுத்தப்படும் எனவும்,
அண்மைச் செய்தி: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது: இபிஎஸ் குற்றச்சாட்டு
தவறிழைப்போருக்கு பாடமாகவும், விரைந்து தண்டனை பெற்றுத்தருவதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாகவும், இந்த வழக்கு இருக்க போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்தார்.
இதற்கு முன்பு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், அதிமுக ஆட்சியில் தவறு செய்தவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.