கோத்தகிரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கோத்தகிரி – மேட்டுப்பாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் 5 இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு சாலைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள குஞ்ச பானை பகுதியில் ஐந்து இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் இன்று அதிகாலை கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பயணித்த வாகன ஓட்டிகள் மண்சரிவு தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் சரிந்துள்ள மண்சரிவு மற்றும் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சாலையின்
இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன,
இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும்
மாணவர்கள் பாதிப்படைந்தனர். இதனால் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி
இயந்திரங்களைக் கொண்டு சாலையில் விழுந்த மண் சரிவு மற்றும் மரங்களை
அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால்
கோத்தகிரி – மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் ஆபத்தான நிலையில் உள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு அபாயகரமாக உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில்ஈடுபட உள்ளனர்.