லட்சத்தீவு நிர்வாக அதிகாரிக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகை ஆயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக வழக்கை, கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துள்ளது.
லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், லட்சத்தீவில் கொரோனா பரவுவதற்கு மத்திய அரசு உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவதாக, நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா குற்றம்சாட்டியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து பாஜக கட்சி அளித்த புகாரின் அடிப்படையில், ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவின் கவராத்தி காவல்துறையினர் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா, தன் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணையை நடத்துவதற்கு தடை கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் மேனன், விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். தற்போது நடைபெற்று வரும் விசாரணை விவரங்களை, நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி லட்சத்தீவு நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டார்.