கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வழக்கில் இதுவரை திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று 6 மணி நேரமும், இன்று 4 மணி நேரமும், என 2 நாட்களில் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது, கோடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள் இருந்தன?, அங்கிருந்த ஆவணங்கள் பற்றி யார் யாருக்கு தெரியும்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.