நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசுக்கு தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், நூல் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முழு அடைப்பு போராட்டத்தால் 200 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.