கேரளாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தொற்று பரவல் குறைந்ததால் வார நாட்களில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. முழு ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து சேவை ரத்தாகியுள்ளது. கேரளாவில், கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 87 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement: