26 C
Chennai
June 7, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

புதிய வகை கொரோனா குறித்து கவலைப்பட தேவையில்லை – கேரள சுகாதாரத் துறை அமைச்சர்!

கேரளவில் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள் கவலைப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து  அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; “எந்தக் கவலையும் தேவையில்லை. அது ஒரு துணை மாறுபாடு தொற்று. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர்களை சோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள் : நெல்லையில் தொடர் கனமழை | கடைகளில் புகுந்த மழைநீர்…

கேரளத்தின் சுகாதார அமைப்பு மிகவும் நன்றாக இருப்பதால், மரபணு பகுப்பாய்வு மூலம் அதைக் கண்டறிய முடியும். எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.  இருந்தாலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறி உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான லக்ஸெம்பர்கில் சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ‘ஜெஎன்.1’ வகை கொரோனா, பிஏ.2.86 வகையின் திரிபாகும். இப்போது பல்வேறு நாடுகளில் இப்புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ‘ஜெஎன்.1’ வகையானது வேகமாகப் பரவும் என்பதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமெனக் கூறப்படுவதால், கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி சென்ற ஒருவருக்கு அங்கு ஜெஎன்.1 வகை தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரம், திருச்சியிலோ அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலோ கொரோனா பாதிப்பு அதிகரிக்கவில்லை.

இந்தச் சூழலில், கேரளத்தில் 79 வயது பெண்ணுக்கு ஜெஎன்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன. ‘காய்ச்சல், இருமல் போன்ற மிதமான அறிகுறிகளுடன் இருந்த அவருக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி ஆர்டி-பிசிஆர் சோதனை மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

அவரின் மாதிரிகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டதில், ஜெஎன்.1 வகை தொற்று கடந்த டிச.8-ஆம் தேதி கண்டறியப்பட்டது. நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 90 சதவீதம் மிதமானதாகவே உள்ளது. இதற்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே போதுமானது. கேரளப் பெண்ணுக்கு ‘ஜெஎன்.1′ தொற்று உறுதியான நிலையில், நாட்டில் வேறெங்கும் இப்புதிய வகை பாதிப்பு கண்டறியப்படவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading