ராமேஸ்வரத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ பதினெட்டாம்படி சந்தன மகா கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பதினெட்டாம்படி சந்தன மகா கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைனில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு ஸ்ரீபதினெட்டாம்படி சந்திர மகா கருப்பணசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் கணபதி ஹோமம் நடைபெற்றது.
யாகசாலையில் வேத முழங்க நேற்று இரண்டாம் கால யாக பூஜை காலை 7:30 மணிக்கு துவங்கி மண்டல பூஜை, ஷன்னவதி ஹோமம் உள்ளிட்டவைகள் நடைபெற்று பின் காலை 10 மணி அளவில் ஸ்ரீசந்தன விநாயகர் மற்றும் ஸ்ரீ பதினெட்டாம்படி சந்தன மகா கருப்பணசாமி விமான கலசங்களுக்கு வேத வித்வனர்களால் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ராமேஸ்வரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கருப்பணசாமியை வழிபட்டு சென்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.