காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் மாசி-பங்குனி திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மாறிய காரைக்குடி இஸ்லாமியர்கள்.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்கு உட்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வரும் மாசி-பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு இந்த விழா கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வருகிற 15-ஆம் தேதி மாலை கரகம், மதுக்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி முத்தாலம்மன் கோவிலில் இருந்து நடைபெற உள்ளது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா 16-ஆம் தேதி காலையில் நடக்கிறது. அன்றைய தினம் விரதம் இருக்கும் பக்தர்கள் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை தரிசனம் செய்ய உள்ளனர்.
மேலும், அன்றைய தினம் நகர் முழுவதும் பக்தர்கள் கூட்டம், கூட்டமாக காணப்படுவார்கள். தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கரகம் பருப்பூரணிக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியும், 17-ஆம் தேதி இரவு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
#NewsUpdate | காரைக்குடியில் மத நல்லிணக்கம்https://t.co/WciCN2AH8n | #Karaikudi | #News7TamilUpdates | #news7tamil pic.twitter.com/RhyXMZft5i
— News7 Tamil (@news7tamil) March 13, 2022
முத்துமாரியம்மன் கோவில் பால்குட திருவிழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புக்கட்டி மஞ்சள் நிற ஆடையை அணிய தொடங்கியதால் காரைக்குடி நகர் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளித்தது.
இந்நிலையில், காப்புக்கட்டி மஞ்சள் நிற ஆடையை அணிந்த பத்தர்கள் சாலையில் சாரை சாரையாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது, பஜார் பள்ளி வாசலை, பக்கதர்கள் கடந்து சென்ற போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் இஸ்லாமியர்கள் சாலையில் தண்ணீர் ஊற்றிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.