26.7 C
Chennai
September 24, 2023
தமிழகம் செய்திகள்

கன்னியாகுமரியில் கோடைசீசனின் கடைசி ஞாயிற்றுக்கிழமை-அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தினால் திருவிழா கோலத்தில் கன்னியாகுமரி கடற்கரை

இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காண்ப்படுவதால் கடற்கரை
திருவிழா கோலம் பூண்டுள்ளது.

இந்தியாவின் தென்கோடியான தமிழகத்தின் கன்னியாகுமரி சர்வதேச சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.ஆண்டுதோறும் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆண்டுக்கு முன்று முறை சீசன் நிகழும் கன்னியாகுமரியில் கோடை சீசனின் கடைசி ஞாயிற்று கிழமை இன்று என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.
காந்தி மண்டபம்,விவேகாணந்தர் பாறை,திருவள்ளூர் சிலை எங்கும் மக்களின் தலைகளாகவே காணப்படுகிறது.

திருவள்ளூர் சிலை மற்றும் விவேகாணந்தர் பாறைக்கு இரண்டு படகுகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது முன்று படகுகள் இயக்கப்படுகின்றன.அதிகாலை சூரிய உதயத்தை காண ஆயிரக்கண்க்கான சுற்றுலா பயணிகள் வந்ததால் கடற்கரை முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.கட்டுகடங்காத கூட்டத்தினரால் நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

Halley Karthik

திருப்பூரில் தமிழ்நாட்டு இளைஞர்களை துரத்திய வடமாநில தொழிலாளர்கள் – நடந்தது என்ன?

G SaravanaKumar

சென்னைக்கு வரும் 18 ஆம் தேதி ரெட் அலர்ட்: அதி கனமழை பெய்யும்!

EZHILARASAN D