காஞ்சி பஞ்ச பூத தலங்களைத் தரிசித்த தாய்லாந்து பக்தர்கள்!

பஞ்சபூத ஸ்தலங்களைத் தரிசிக்க தாய்லாந்திலிருந்து 28 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வந்துள்ளது.  பஞ்ச பூத ஸ்தலங்கள் என அழைக்கப்படும் ஆகாயம் , நீர் , காற்று, வாயு , நெருப்பு ஆகிய திருத்தலங்களைத்…

பஞ்சபூத ஸ்தலங்களைத் தரிசிக்க தாய்லாந்திலிருந்து 28 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு வந்துள்ளது. 

பஞ்ச பூத ஸ்தலங்கள் என அழைக்கப்படும் ஆகாயம் , நீர் , காற்று, வாயு ,
நெருப்பு ஆகிய திருத்தலங்களைத் தரிசிக்க தாய்லாந்தில் இருந்து 28 நபர்கள் கொண்ட
குழு காஞ்சிபுரம் வருகைப் புரிந்தது. முன்னரே சிதம்பரம் கோயிலைத் தரிசித்தப் பின் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்தனர்.

அதன்பின் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான மண் தளம் என அழைக்கப்படும் ஸ்ரீகாஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் 28 பேரும் தரிசனம் மேற்கொண்ட பின்
தல விருட்சம் மரம் அருகே தியானத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு சிறப்பு பூஜை மேற்கொண்டு தரிசனம் பெற்ற பின் அதன் ஒருங்கிணைப்பாளர் தெரிவிக்கையில், வருடத்திற்கு இரு முறைக்கு மேல் தமிழ்நாடு வந்து ஆன்மீக கலாச்சாரம் உள்ள பகுதிகளை தரிசித்து வருவதாகவும், தங்களுக்கு அது
பிடித்துள்ளதால் அதன் வழியைப் பின்பற்றும் வகையில் தங்களது நாட்டிலும் சிவன்
மற்றும் அம்மன் திருக்கோயில்கள் நிர்மாணித்து வழிபட்டு வருவதாகவும்,
தெரிவித்தார்.

தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண
பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அதனை காணும் நிகழ்வு மகிழ்ச்சி அளிக்கிறது என
அனைவரும் தெரிவித்தனர்.

அனைவரும் தியானத்தில் ஓம் நமச்சிவாயா மற்றும் ஸ்லோகங்கள் கூறி தியானத்தில்
ஈடுபட்டது திருக்கோயில் வந்த பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது.

—ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.