பலி கொடுக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட ஆடுகள்; ஆராய்ச்சியில் வெளியான மர்மங்கள்!

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட பழங்கால மம்மி செய்யப்பட்ட செம்மறி ஆட்டின் தலைகளை பாரோ ராம்செஸ் கோவிலில் கண்டுபிடித்துள்ளனர். கோயில்கள் மற்றும் கல்லறைகளுக்குப் புகழ்பெற்ற…

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட பழங்கால மம்மி செய்யப்பட்ட செம்மறி ஆட்டின் தலைகளை பாரோ ராம்செஸ் கோவிலில் கண்டுபிடித்துள்ளனர்.

கோயில்கள் மற்றும் கல்லறைகளுக்குப் புகழ்பெற்ற தெற்கு எகிப்திய தளமான அபிடோஸில், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு நாய்கள், காட்டு ஆடுகள், பசுக்களின் மம்மிகளையும் தோண்டி எடுத்தனர்.

இந்த ஆட்டுக் கிடாய்களின் மண்டை ஓடுகள் அவை பலிகொடுக்கப்பட்டு 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடப்பட்டது என்று அமெரிக்க மிஷனின் தலைவரான சமே இஸ்கந்தர் கூறியுள்ளார்.

கிமு 2374 முதல் 2140 வரையிலான நிலப்பகுதியில் ராம்செஸ் கோயில் மற்றும் அங்கு நடந்த செயல்பாடுகள் மற்றும் கிமு 323 முதல் கிமு 30 வரையிலான காலம் வரை, அகழ்வாராய்ச்சிகளின் விளைவாக நன்கு புரிந்து கொள்ளப்படும் என்று எகிப்தின் தொல்பொருட்களின் கவுன்சிலின் தலைவர் மோஸ்டாஃபா வஜிரி குறுகியுள்ளார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மம்மி செய்யப்பட்ட விலங்குகளின் எலும்புகளையும், சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஐந்து மீட்டர் தடிமன் (16-அடி) சுவர்களைக் கொண்ட அரண்மனையையும் கண்டுபிடித்தனர். பல சிலைகள், பாப்பைரி, பழைய மரங்களின் எச்சங்கள், தோல் ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவையும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.