காமராஜர் நினைவு நாள் – ராகுல் காந்தி பதிவு..!

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 50 வது நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி அவரை நினைவு கூர்ந்துள்ளார். 

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 50 அவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

”பாரத ரத்னா கே. காமராஜரின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது பணிவு, நேர்மை, கல்வி மற்றும் சமூக நீதியில் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காக அவர் ஆற்றிய முன்னோடிப் பணிகள் தலைமுறை தலைமுறையாக ஊக்கமளித்து வருகின்றன”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.