30 C
Chennai
November 28, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் காலமானார்

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங், லக்னௌவில் உள்ள சஞ்சை காந்தி மருத்துவக் கல்லூரியில் கடந்த ஜூலை 4ம் தேதி உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பல உடல் உறுப்புகள் செயலிழந்ததன் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக 89 வயதான கல்யாண் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மத்திய அமைச்சர்கள் மற்றும் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நலம் விசாரித்திருந்தனர். இவர் கடந்த 2014 முதல் 2019 வரை ராஜஸ்தான் ஆளுநராகவும், 1991 முதல் 1992 வரை உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy