கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள்? என்பதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தங்கள் மீது என்ன வழக்கு என்றே தெரியவில்லை. மாணவி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அண்மைச் செய்தி: ‘8 மணிநேர தூக்கம் இன்றியமையாதது ஏன் தெரியுமா?’
மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது என மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காகக் கைது செய்யப்பட்டார்கள்? என்பதற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.








