திருப்பூரில் நடைபெற்ற ஹேப்பி சண்டே நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஹேப்பி சண்டே நிகழ்ச்சியில், சிறார்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில், விளையாட்டு போட்டிகள், சிலம்பம், கராத்தே, ஆடல், பாடல் உள்ளிட்டவை நடைபெற்றன. 5 கிலோமீட்டர் தூரம் வரை நடைபெற்ற இந்த ஹாப்பி சண்டே நிகழ்வில் 80க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றன. குறிப்பாக திருப்பூர் யூனியன்
மில் சாலை முதல் கேபிஎன் காலனி வரை ஹேப்பி சண்டே நிகழ்ச்சி நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்வில், மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். ஹேப்பி சண்டே நிகழ்ச்சியில், திரைப்பட பாடலுக்கு இளைஞர்கள், சிறார்கள் நடனமாடி உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியி பேசிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:
தொடர்ந்து மாதம் தோறும் இந்நிகழ்வு நடைபெறும். மக்களின் ஆர்வம் மற்றும்
உற்சாகத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்வின்
ஒரு பகுதியாக டிசம்பர் 31ஆம் தேதி இரவு மாநகராட்சி நிர்வாகம் சார்பில்
புத்தாண்டை வரவேற்கும் வகையில் மிகப்பெரும் மகிழ்ச்சி ஏற்பாடு செய்ய
இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் , மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் திரைப்படப் பாடலுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தினர். இதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை பார்வையிட்ட மேயர் தினேஷ்குமார் அவர்களோடு விளையாடி சிறுவர்களையும் உற்சாகப்படுத்தினார்.
கடந்த மாதங்களை விட இம்மாதம் பொது மக்களின் கூட்டம் அதிகளவு இருந்ததன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பெண்களுக்காக தனி மேடை அமைக்கப்பட்டு டிஜே நடனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.