#SK21 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 80 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
மற்றொரு பக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் . SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது.
இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இதையடுத்து படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நடிகை சாய் பல்லவி பங்கேற்கவுள்ளார். சென்னை ஷெட்யூலை தொடர்ந்து மீண்டும் படத்தின் சூட்டிங் காஷ்மீரிலேயே நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









