திருப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட தன்னார்வலர்களுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் மாதம்
முதல் பெண்களுக்கு கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான பயனாளிகளை தேர்வு செய்வதற்காக இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பங்கு பெற்றுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பிற தன்னார்வலர்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி கூட்டம் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 235 நியாய விலைக் கடைகளின் அருகில் நடைபெற உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த சிறப்பு முகாமில், தகுதியுடைய குடும்பத் தலைவிகள் மூலம் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்று சரிபார்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொள்ள அவர்களுக்காக நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ரூபி.காமராஜ்







