ஜுலை, ஆகஸ்டில், திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்கான, 300 ரூபாய் தரிசன டிக்கெட், இம்மாதம் 24ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி திருமலையில், தினமும் சர்வ தரிசனம், டைம் சிலாட் தரிசனம், கட்டண தரிசனம், விஜபி பிரேக் தரிசனம், அங்கப் பிரதட்சண தரிசனம், மூத்த குடிமக்கள் பிரத்யேகத் தரிசனம், ஒரு வயதுக்குட்ட குழந்தை உள்ள பெற்றோர் சிறப்புத் தரிசனம் உள்ளிட்ட முறைகளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசனம் செய்துவருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிலும் குறிப்பாக, தற்போது கோடைவிடுமுறையையொட்டி, திருப்பதி திருமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால், தர்ம தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க, பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இக்கூட்டம் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை இருக்கும் என தேவஸ்தானத்தினர் கருதுகின்றனர்.
இந்த நிலையில், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட், வரும் 24ம் தேதி, காலை பத்து மணிக்குத் தேவஸ்தான ஆன்லைனில் வெளியிடப்படும் என்று, TTD நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி டிக்கெட்டுகளை பக்தர்கள் தேவஸ்தானத்தின் WWW.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளாம் எனவும், போலி இணையங்களை நம்பிஏமாற வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா