காங்கிரஸ் தவறாக மக்களை வழிநடத்துகிறது : ஜெ.பி.நட்டா

கொரோனாவை எதிர்த்து நாட்டு மக்கள் தைரியமாக போராடி கொண்டிருக்கையில், காங்கிரஸ் தவறாக மக்களை வழிநடத்துவதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, காங்கிரஸ் தலைவர்…

கொரோனாவை எதிர்த்து நாட்டு மக்கள் தைரியமாக போராடி கொண்டிருக்கையில், காங்கிரஸ் தவறாக மக்களை வழிநடத்துவதாக பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடுமையாக சாடியிருந்தார். சோனியாகாந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவாசின் மருந்தை, காங்கிரஸ் கட்சி கேலி செய்வது போன்று உள்ளதாக கூறியுள்ளார்.

தடுப்பு மருந்தின் மீது மக்களுக்கு சந்தேகத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது என்று கூறியுள்ள நட்டா, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை பலவீன படுத்த முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.