ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். டோக்கியாவில் நடைபெற்று வரும் இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ஜப்பானின் அகனி யமாகுசியை எதிர்கொண்ட இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். அகனி யமாகுசியை 21-14, 21-17 என்ற செட்களில் வீழ்த்திய பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.




