தமிழகம் பக்தி செய்திகள்

புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவை
முன்னிட்டு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி ஸ்ரீ முத்துமுனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை, கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் திருச்சி, மதுரை மற்றும் திண்டுக்கல் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கு பெற்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி
வீரர்களுக்கும் மிக்சி, கிரைண்டர் மற்றும் சைக்கிள் என பல்வேறு பரிசு
பொருட்கள் வழங்கப்பட்டது. பாப்பான்விடுதி கிராம மக்கள் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும், ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

– கு. பாலமுருகன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

G SaravanaKumar

மகளின் படுக்கை அறையை எட்டிப் பார்த்த இளைஞனை விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த தாய்!

Jayapriya

திருச்சி: யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு நிதி

Arivazhagan Chinnasamy