ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜெயிலர் பாடலாசிரியர்: இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு!

ஜெயிலர் படத்தின் ஹுக்கும் எனும் பாடலை எழுதி பிரபலமான பாடலாசிரியர் சூப்பர் சுப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன்…

ஜெயிலர் படத்தின் ஹுக்கும் எனும் பாடலை எழுதி பிரபலமான பாடலாசிரியர் சூப்பர் சுப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. இந்தப் பாடலை எழுதி பிரபலமானவர் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு. ஹுக்கும் எனும் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. யூடியூபில் 1.2 கோடி பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ‘பேரை துக்க நாலு பேரு, பட்டத்தை பறிக்க நூறு பேரு..’ ஆகிய வரிகள் இணையத்தில் சர்ச்சையானது. சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே என ரஜினி ரசிகர்கள் மீண்டும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் பாடலாசிரியர் சூப்பர் சுப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஜினி ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து நெகிழ்ச்சியாக விடியோவை பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.