சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மத்திய…

தமிழ்நாட்டில் 5 சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, சென்னை புழல் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார், சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் நிஜிலா நாகேந்திரன், சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மதுரை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மத்திய சிறைக்கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த கிருஷ்ணகுமார், கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.