களக்காடு அருகே ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

களக்காடு அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பத்மநேரியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் முருகன் என்பவர்…

களக்காடு அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பத்மநேரியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் முருகன் என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக 7ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

அண்மைச் செய்தி: “சோழவரம் அருகே விளையாட சென்று மாயமான 8 வயது சிறுவன்”

இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆசிரியரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற நெல்லை எஸ்பி சரவணனின் பரிந்துரையின்பேரில், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.