சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைத்து அரசாணை வெளியீடு

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்களை அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.   மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, 2010ம்…

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்களை அமைத்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

 

மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கான விதிகள் 2019ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை அது செயல்பாட்டில் இல்லை.

 

எனவே, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கான விதிகள் செயல்பாட்டிற்கு வருமா என்பது குறித்து நியூஸ் 7 தமிழ் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமத்திற்கு 4 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாலை பாதுகாப்பு மற்றும் மோட்டார் அல்லாத போக்குவரத்து, பல்தரப்பு ஒருங்கிணைப்பு, நகர்ப்புற மீள்திறன், டிஜிட்டல் சென்னை என நான்கு துணைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. துணைக்குழுக்களுக்கான தலைமை, விதிமுறைகள், குழுக்கள் கூட வேண்டிய கால அவகாசம், நோக்கம், செயல்பாடு குறித்தும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 

-சுஷ்மா சுரேஷ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.