ஈஷா மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்பு

கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடி சமூகத்தில் இருந்து முதன்முறையாக குடியரசு…

கோவையில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பழங்குடி சமூகத்தில் இருந்து முதன்முறையாக குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பொறுப்பேற்றுள்ளார். இவர் பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார். ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திரெளபதி முர்மு அழைக்கப்பட்டதையடுத்து இவ்விழாவிற்காக அவர் தமிழகம் வருகிறார்.

ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழா உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பாக நடைபெறும். இவ்விழா ஈஷா யோகா மையத்தில் கடந்த 28 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்தி: செல்பி எடுக்க மறுத்ததால் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது தாக்குதல்

இதைத்தவிர சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட 32 இடங்களில் மகா சிவராத்திரி விழா கொண்டாப்பட உள்லது. கோவையில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான், பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.