‘வாடிவாசல்’ படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வெளியான புதிய அப்டேட்

‘வாடிவாசல்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும்…

‘வாடிவாசல்’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்து வருகிறார்.

உலகளவில் 38 மொழிகளில் ‘கங்குவா’ வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.  படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன.  ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில்,  இந்தாண்டு மத்தியில் திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி,  வாடிவாசல் என்னும் திரைப்படம் சூர்யா நடிப்பில்,  வெற்றிமாறன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.  முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்தது.

கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை – 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை அவர் துவங்குவார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில்  நடிகர் சூர்யா வேறு சில படங்களில் நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதேநேரம் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக தனுஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால் இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.