Zee ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அடுத்த படைப்பான ‘காந்தி டாக்ஸ்’, ப்ளாக் காமெடி ஜானரில், வசனமில்லா மௌனப் படமாக உருவாகிறது.
Zee ஸ்டூடியோஸ், தொடர்ந்து மாறுபட்ட களங்களில் வித்தியாசமான திரைப்படங்களைத் தந்து, இந்தியத் திரையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ப்ரோமோ, படத்தின் மையத்தை பார்வையாளர்களுக்கு வெளிக்காட்டியது. மௌனப் படமாக இருப்பதால், ’காந்தி டாக்ஸ்’ அனைத்து ‘மொழி’ தடைகளையும் உடைத்து, மறந்து போன கடந்த கால மௌனப் பட சகாப்தத்தை, நிகழ்காலத்தில் பார்வையாளர்களுக்கு தரும் ஒரு பேரனுபவமாக இருக்கும் என்பது உறுதி.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படத்தில் பிரபல முன்னணி திரைப்பிரபலங்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் கிஷோர் P பெலேகர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மொழி, உலகளாவிய ஒரே மொழியான இசை மட்டுமே. மேலும் உலகம் முழுவதும் பல விருதுகளை குவித்த இசைப்புயல் பத்மஶ்ரீ ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இயக்குநர் கிஷோர் P பெலேகர் கூறுகையில், “மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல. இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட” என்று தெரிவித்தார்.
இத்திரைப்படம் குறித்து Zee ஸ்டூடியோஸின் CBO ஷாரிக் படேல் கூறுகையில்,
”இதன் கதை தனித்துவமானது, அனைவரும் தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்தக்கூடியது. பலமான கமர்ஷியல் அம்சங்களுடன் நல்ல பொழுதுபோக்கை இக்கதை கொண்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் சேதுபதி மற்றும் அரவிந்த் சுவாமி ஆகியோருடன் ஒரு மௌனப் படத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புது முயற்சி எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் தந்துள்ளது” என்றார்.
Zee ஸ்டூடியோஸ் தயாரித்து வழங்கும், ‘காந்தி டாக்ஸ்’ படத்தை Kyoorious Digital Pvt Ltd. மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் 2023ல் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பாக்கப்படுகிறது.